பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்ல வேட்கை சொல்லலாம். ஆனால் அதைவிடச் சிறந்த பொருள் ஒன்று உண்டு. மறைந்து நிற்பவர்களைக் கள்ளர் என்று சொல்வது ஒரு வழக்கம். திருமாலுக்குப் பெண்ணாகப் பிறந்தவள் வள்ளி. திருமால் முனிவராகவும், திருமகள் மானாகவும் வர இரண்டு பேர்களுக்கும் பெண்ணாகப் பிறந்து வள்ளிக்கொடிக்குப் பக்கத் தில் கிடந்த போதுதான் நம்பிராஜன் அக்குழந்தையை எடுத்துச் சென்றான். அவள் இப்போது வேடர்களுக்கு இடையில் மறை வாக இருக்கிறாள். வேடர் கூட்டத்தில் ஒருத்தியாகத் தன்னை எண்ணிக்கொண்டு வேட்டுவ மங்கை செய்யும் காரியங்களைச் செய்து கொண்டிருக்கிறாள். முருகப் பெருமானிடத்தில் இயல் பாகவே குறக் குலத்தினருக்கு அன்பு உண்டு. அந்த வகையில் வள்ளியின் உள்ளத்தில் அன்பு இருந்தாலும், தனக்குள்ள உரிமையை எண்ணி அவனை அடைய வேண்டுமென்ற முயற்சி இல்லாமல் இருக்கிறாள். மறைவிலே வளர்ந்து வந்த வள்ளி எந்த இடத்தில் போய்ச் சேர வேண்டுமோ அந்த இடத்தில் சேராமல் தனித்து இருக்கிறாள். ஆகையால் அவள் கள்ளத்தனமாக ஒர் இடத்தில் வைக்கப்பெற்ற பொருளைப் போல விளங்குகிறாள். ஒரு பொருள் ஒருவனுக்குரியது. அது ஏதோ ஒரு காரணத் தினால் ஒருவரும் அறியாமல் வேறு ஓரிடத்தில் இருப்பதாக வைத்துக் கொள்வோம். அங்கே அந்தப் பொருள் இருக்கிறதென்று தெரிந்த பிறகு பொருளுக்குடையவன் சும்மா இருப்பானா? எப்படி யாவது அதைப் போய்த் தன்னுடையதாக்கிக் கொள்ள வேண்டு மென்று முயல்வான். திருமாலினுடைய மகளாகிய வள்ளிநாயகி தன்னாலே ஆட்கொள்வதற்குரியவள் என்று முருகன் அறிவான். அந்தப் பொருள் மறைவாக வள்ளி மலையில் இருக்கிற தென்பதை நாரத முனிவர் வந்து சொன்னார். இந்த நாடகத்தில் திருட்டுப்போன பொருள் இன்ன இடத்தில் இருக்கிறதென்று கண்டு சொன்ன ஒற்றரைப் போல நாரதர் இருந்தார். முருகனுக்கு அது தெரியாதா? ஆனால் நாடகத்தை ஒழுங்காக நடத்த வேண்டும் அல்லவா? நாரதமுனிவர் வள்ளியம் பெருமாட்டியின் பேரெழிலை வருணிக்க, அதனால் மிக்க காதல் உடையவன் போல வியாகுல மனத்தோடு வேட உருவம் தரித்து வள்ளி மலையை நாடிச் சென்றான். அவன் சென்றது, தனக்குரிய பொருள் இன்ன இடத்தில் இருக்கிறதென்று துப்புத் துலக்காமல் 23i