பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/367

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 தொட்ட தொட்ட இடமெல்லாம் இனிப்பது. அவர் பாடிய பாடல் களின் ஆழம் முழுவதையும் காண முடியுமா? முழுவதும் கண்டால் சொல்லத்தான் முடியுமா? 'அவ்வாறறிவார் அறிகின்றதலால் எவ்வாறொருவர்க் கிசைவிப் பதுவே" என்று கரைந்து நிற்கத்தான் தோன்றும். இவற்றை உருவாக்கியதற்குத் துணையாக இருந்தவர் அன்பர் சிரஞ்சீவி அனந்தன், புத்தகமாக்க உதவிர் அன்பர் ரீ ரா. ரீ. பூரீகண்டன் அவர்கள். இந்த இருவருடைய உதவியையும் எளியேன் பெற வைத்தது ஆண்டவன் அருள். அந்த அருள் வாழ்க! கி.வா. ஜகந்நாதன் Ο1.11.1963 358