பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/383

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 களைப் பார்த்த பிறகு வேறு எதையும் பார்க்க முடிகிறது இல்லை. நம்முடைய கண்ணும், அவனுடைய கண்ணும் ஒன்றுபட்டால் பேரின்பம் தானே வந்து அமையும். காதலனும் காதலியும் ஒருவரை ஒருவர் நோக்குவார்கள் என்றும், கண்வழி உள்ளே புகுவார்கள் என்றும் காவியங்கள் பாடுகின்றன. 'கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல." என்பது திருக்குறள். கண்ணும் கண்ணும் பார்ப்பதில் மிக்க இன்பம் உண்டாகுமாம். இங்கே ஆண்டவனுடைய திருவிழிகளை நம்முடைய கண் கள் பார்க்கின்றன. அப்போது உண்டாகும் இன்பம் எல்லா இன்பங்களையும்விடப் பெரிதாக இருக்கும். முருகப் பெரு மானுடைய கண்கள் தாமரை மலரைப் போல அமை கின்றன. அவற்றில் விரிவு உண்டு; ஒளி உண்டு. குரு வடிவு திருவடி முதல் மலர்க்கண்கள் வரையிலுள்ள உறுப்புக்களை யுடைய திருக்கோலத்தோடு முருகனே குருவாக எழுந்தருளினான் என்று அருணகிரியார் கூறுகிறார். நாம் பற்றிக் கொள்வதற்கு ஆதாரமாகத் திருவடி தோன்றியது. பின்பு மெல்ல மெல்லத் தெளிவு பிறக்கும் வண்ணம் ஞான சக்தியாகிய வேல் தோன்றியது. அப்பால் நம்முடைய துன்பங்களை எல்லாம் போக்கிக் கொள்வதற்கு முருகப் பெருமானுடைய வீரத்தை வெளிப்படுத்துகிற திருத்தோள்கள் தோன்றின. பிறகு நம்முடைய உள்ளம் அமைதி அடையத் திருமுகம் தோன்றியது. பின்பு திருவருள் அநுபவத்தை உண்டாக்கும் திருக்கண்கள் தோன்றின. இப்படிப் படிப்படியாக முருகப் பெருமானுடைய திருவுருவத் தோற்றம் ஆனந்த அநுபவத்தை உண்டாக்கியது. இவை எல்லாம் . சேர்ந்து உள்ளத்தில் புதைந்து அறியாமையைப் போக்கவும் மெய்ஞ்ஞானத்தை வளர்த்து என்றைக்கும் மாறாத பேரின்பத்தை அநுபவிக்கவும் உதவின. இறைவனே குருவாக எழுந்தருளி அருள் புரிந்தான். அருணகிரியார் இதனை அநுபவத்தில் கண்டவர் ஆதலின், நாமும் முருகப் பெருமானைத் தியானம் பண்ணும் வகையில் இந்தப் பாடலைச் சொன்னார். 374