பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/391

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 சாயங்கால வேளையில் ஒளியும் இருளும் கலந்திருத் கின்றன. அதுபோல் கனவில் பொய்யான நிகழ்ச்சியும் மெய்யான அநுபவமும் கலந்திருக்கின்றன. அந்தக் கனவு விழிப்பு நிலையும் அன்று; தூக்க நிலையும் அன்று. துங்கினால் எல்லாவற்றையும் மறந்து தூங்குகிறோம். விழித்தால் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அப்படி விழித்துக் கொண்டு பார்க்கிற பார்வை உண்மையான பார்வை என்று சொல்ல முடியாது. கண்ணால் காண்பது எல்லாம் மெய் அல்ல; காதால் கேட்பது எல்லாம் உண்மை அல்ல என்ற பழமொழி உண்டு. சினிமாவும் மனநிலையும் ஒரு சினிமாப் படத்தைப் பார்க்கிறோம். பல பேர்கள் பல விதமாக ஒடியாடிக் காரியங்கள் செய்வதைக் காண்கிறோம். நாம் பார்க்கும் ஆளுக்கு உயரம், பரிமாணம் எல்லாம் இருப்பது போலத் தோன்றுகிறது. ஆனால் உண்மையில் அங்கே பரிமாணமோ கனமோ இல்லை. அகல நீளம் மாத்திரம் இருக்கின்றன. திரையில் படம் ஒடிக் கொண்டிருக்கும்போது பரிமாணம் உள்ள பொருள்களைப் போலவே எல்லாம் தோன்றுகின்றன. ஆனால் அந்த ஆட்டம் நின்றவுடன் விளக்குப் போட்டால் நிற்கிறது வெறும் திரைதான் என்பது தெரிய வரும். படம் ஒடும்போதுகூட அகல நீளப் படந்தான் இருக்கிறதே தவிரப் பரிமாணப் படம் இல்லை. தோற்றம் மாத்திரம் பரிமாணத்துடன் தோன்றுகிறது. சினிமாப் படம் ஆரம்பிப்பதற்கு முன்பு ஒருவர் திரையைப் பார்த்தால் படம் ஒடிக் கொண்டிருக்கிறபோது திரையில் நடக் கிறது தோற்றந்தான் என்பதைத் தெரிந்து கொள்ளலாம். அல்லது படம் முடிந்த பிறகு பார்த்தாலும் திரைதான் உண்மையாக இருக்கும் பொருள் என்று தெரிய வரும். உலகத்திற்கு ஆதியும் அந்தமும் ஆகிற நிலையில் யாராவது இருந்து பார்த்தால் மற்றவை எல்லாம் சினிமா ஒட்டம் போலப் பொய்யானவை என்று தெரிய வரும். கானல் உவமை உலகம் தோற்றுகிற தோற்றத்திற்குக் கானல் நீரை உவமை யாகச் சொல்வது வழக்கம். வெப்பம் மிகுந்து இருக்கும் போது 382