பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/394

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராப்பகல் அற்ற இடம் குலைக்கும். இவைகள் எல்லாம் காதில் படாமல் ஏதாவது ஒரு தனி அறையில் போய் உட்கார்ந்தால் அப்போது பல நினைவுகள் உள்ளிருந்து தோன்றும். மனம் எங்கேயாவது போய் நிற்கும். யாரோ ஒருவரிடம் கடன் வாங்கினது அப்போதுதான் நினைவுக்கு வரும். பத்து வருஷங்களுக்கு முன்பு நிகழ்ந்த நிகழ்ச்சி திடீ ரென்று வந்து நிற்கும். முதல் நாள் போயிருந்த வீட்டின் முற்றத் தில் போய் மனம் நிற்கும். இப்படிப் புறத்திலிருந்தும், உள்ளத் திலிருந்தும் பலபல தடைகள் வந்து தாக்கும். மனம் ஒருமைப் படுவது மிகவும் அருமையாக இருக்கும். துக்கம் Tெப்படியோ இந்த எண்ணங்களை எல்லாம் மாற்றி, காதில் சப்தம் விழுந்தாலும் கேட்காதபடி மனத்தை ஒருமைப்படுத்து கிறோம். அப்போதும் ஒர் ஆபத்து இருக்கிறது. மனம் ஒருமைப் படுவது போலத் தோன்றிப் பிறகு தூக்கம் வந்துவிடும். தூங்குகிற வனுக்கு எந்தவிதமான சப்தமும் கேட்காது. உட்கார்ந்தபடியே தூங்கத் தலைப்பட்டால் தியானம் எங்கே உருப்படப் போகிறது? ஆண்டவனுடைய திருவுருவத்தைப் பற்றிக் கொண்டு மற்றவற்றை எல்லாம் மறந்து நின்றால் மட்டுமே எவ்விதத் தடையும் வராது; தூக்கமும் வராது. ஆனால் அந்த நிலை வருவது மிகவும் கடின மானது. பல பல எண்ணங்களை எண்ணுவதும், புறத்திலிருந்து வருகிற ஒலிகளைக் கேட்பதும் ஆகிய இவைகள் உள்ள நிலை ஜாக்கிர நிலை. தூக்கம் வருவது கேவல நிலை. இந்த இரண்டையும் சகலகேவலம் என்று சொல்வார்கள். ஒன்றையே பற்றி நின்று தியானிக்கும்போது சகல கேவலம் அற்ற நிலை உண்டாகும். அதையே இரவு பகல் அற்ற இடம் என்று அருண கிரியார் சொல்கிறார். அந்த இடத்தில் வெளியிலிருந்து வரும் தடைகளும் இரா. உள்ளே இருந்தும் எந்தத் தடையும் வராது. தூக்கமும் வராது. மனம் ஒருமைப்பட்டு இறைவனுடைய திரு வருள் தியானத்தில் ஈடுபட்டால் தூக்கத்திற்கு இடம் இல்லை. சகல கேவலம் அற்ற நிலை அந்த மாதிரி ஒரு நிலையை எதையேனும் உபமானம் சொல்லி விளக்க முடியாது. அதை அநுபவித்துத்தான் தெரிந்து 385