இராப்பகல் அற்ற இடம் 2 திருமால் முருகனைப் புகழ்தல் கரி கூப்பிட்ட நாள் கராப்படக் கொன்று அக் கரி போற்ற நின்ற கடவுள்மெச்சும் பராக்ரம வேல, நிருத சங்கார, பயங்கரனே! ண்டவனைத் தரிசனம் பண்ணப் போகிறார் அருண கிரியார். அங்கே ஒரு தனிக் கோயிலில் முருகன் எழுந்தருளியிருக் கிறான். அவர் கோயிலுக்குள் நுழையும்போது உள்ளே இருந்து பேச்சுக்குரல் வெளியே கேட்கிறது. அது அவர் காதிலும் விழு கிறது. நமக்கு முன்னே யாரோ ஒருவர் வந்து எம்பெருமானுடன் பேசிக் கொண்டிருக்கிறார்கள் போல இருக்கிறது என்று சற்றுத் தயங்கித் தயங்கி நிற்கிறார். உள்ளே குரல் கேட்கிறது, 'எம்பெருமானே, உலகத்தினர் விஷயம் தெரியாமல் உலகத்தை எல்லாம் காப்பாற்றுகிறவன் நான் என்று என்னைப் புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆதிமூலமே என்று கதறிய யானைக்கு நான் உயிர்ப் பிச்சை அளித்தேன் என்று அந்த உலகத்தார் சொல்கிறார்கள். அந்த யானை என்னை நினைந்து அழுதது. என் பெருமையைவிடப் பெரியது உன் பெருமை என்று எனக்குத் தெரியாதா? இன்று மூன்று உலகமும் நிலைபெற்று நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறதென்றால் அது உன் பராக்கிரமச் செயலால் அல்லவா? நானும், பிரம்மாவும், மற்றவர்களும் சூர பன்மனுக்கு வரம் கொடுத்து அவனைப் பலசாலியாக்கினோம். பின்பு அவன், தீட்டிய கட்டையிலேயே கூர் பார்க்கிறது போல, எங்களையே எதிர்த்தான். இந்திரன் நடுநடுங்கிப் போனான். எங்களால் அவனைக் காப்பாற்ற முடியவில்லை. நீ உன்னுடைய பெரு வீரத்தினால் சூரபன்மனைச் சங்காரம் செய்து மீட்டும் அமராவதியை அமராவதியாக்கினாய். இமையவர் நாட்டினில் நிறைகுடி ஏற்றி உன் வெற்றிக் கொடியை நாட்டினாய். இந்தப் பெருமையை நான் அறியமாட்டேனா?” என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அவர் சொல்கிற வார்த்தையிலிருந்து உள்ளே இருக்கிறவர் திருமால் என்று தெரிகிறது. தம்முடைய மாப் க.சொ.V1-25 389
பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/398
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை