பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/436

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருதலைக் கொள்ளி எறும்பு வாழ்க்கை நன்றாக முன்னேறினால்தான் சமுதாயம் முன்னேற முடியும் என்பதை அவர்கள் வற்புறுத்துகிறார்கள். அதே சமயத் தில் நம்முடைய ஞான நூல்கள், ஒவ்வொருவனுக்கும் தன் னுடைய ஆன்மா கடைத்தேறும் வழியைப் பார்க்க வேண்டு மென்று சொல்கின்றன. விஞ்ஞானம் மெய்ஞ்ஞானம் ஆகிய இரண்டும் ஒன்றுக்கொன்று போட்டியாக நிற்கின்றன என்று தோன்றுகிறது. இந்த இரண்டுக்கும் நடுவில் இன்னது செய்வது என்று தெரியாமல் திண்டாடுகிறோம். பல இரட்டைகள் இப்படியல்லாமல் வேறு இரட்டைகளும் மோதுவது உண்டு. இரண்டு பேரை ஆசிரியராகக் கொண்டாலும், இரண்டு பேரை மனைவிகளாகக் கொண்டாலும், இரண்டு கடையி: கணக்கு வைத்துக் கொண்டாலும், இரண்டு பேரைத் துணையாக கொள்ள நேர்ந்தாலும், இரண்டு வீட்டுக்கு விருந்து சாப்பிட வருவதாகச் சொன்னாலும், இரண்டு பேரின் உரைகளைப் பார்த்துக் கொண்டிருந்தாலும் எதை மேற்கொள்வது என்ற திண்டாட்டம் வரும். இவைகளும் ஒருவகையில் இருதலைக் கொள்ளியினிடையே உள்ள எறும்பு போன்ற நிலையை உண் டாக்குகின்றன. இப்படிப் பார்த்தால் எறும்பின் நிலை பல பலவாக வருகின்றதைப் பார்க்கலாம். வாழ்வு முழுவதும் சில இரட்டைகளுக்கு நடுவில் நின்று திண்டாடுகிறோம். எப்படியே நமக்கு இந்தத் திண்டாட்டம் விடுவதே இல்லை. இது போக வேண்டுமானால் நம் மனம் திண்மையுடன் இருக்க வேண்டும். இறைவனுடைய திருவடிப் பற்று ஒன்றுதான் அந்தத் திண்மையை உண்டாக்கும். எந்த வேலையைச் செய்தாலும் திருடனுக்குத் திருட்டிலே கண் இருப்பது போலவும், யாரிடம் காதல் செய்தாலும் பரத்தையர்களுக்கு வருமானத்தில் ஆசை இருப்பது போலவும், எத்தனைதான் பேசிக் கொண்டு வந்தாலும் கார் ஒட்டுகிறவனுக்குக் கைச் சக்கரத்தில் நோக்கம் இருப்பது போலவும், உலகில் எப்படி வளைய வந்தாலும் எத்தனை பேர்களிடம் பழகினாலும் எத்தனை முயற்சியில் ஈடுபட்டாலும் நாம் ஆன்ம விடுதலை என்ற குறிக்கோளை மறந்துவிடாமல் இருக்க வேண்டும். இல்லையானால் பற்றுக்களில் ஆழ்ந்து 427