பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/443

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 களும் இருக்கிறார்கள். ஆகவே அச்சத்தைத் தருவனவற்றைக் கண்டு அஞ்சாமல் இருப்பதற்கு, அவற்றால் வரும் துன்பத்தைப் போக்கிக்கொள்ள முடியும் என்ற மன நிலையே காரணம். ஞானம் பெற்ற ஜீவன்முக்தர்கள் எதற்குமே அஞ்சமாட்டார்கள். 'அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை' என்பது அப்பர் திருவாக்கு. மரணம் எல்லாருமே அஞ்சுவதற்குரிய நிகழ்ச்சி ஒன்று உண்டு. அது தான் மரணம் மரணத்திற்கு மிகப் பெரியவர்களும் அஞ்சுவார்கள் என்பதை முன்பே சில முறை பார்த்திருக்கிறோம். இறைவனுடைய திருவருளைப் பெற்றவர்கள் மிகத் திண்மையான நெஞ்சு பெறு வார்கள். கடைசி அச்சமாகிய மரண பயம்கூட அவர்களுக்குப் போய்விடும். காரணம், மரணத்தினால் தமக்கு விடுதலை வரும் என்ற உறுதிப்பாடு இருப்பதுதான். இந்த உடம்பை விட்ட பிறகு இறைவனுடைய திருவடியை அடையும்படி சம்பவிக்கின்ற மரணம் மரணம் அன்று. வேறு உடம்பில் புகுவதற்கு இப்போது மரணம் நேருமானால் அதுதான் அஞ்சுவதற்குரியது. அதைத்தான் மரணம் என்று சொல்ல வேண்டும். மெய்ஞ்ஞானிகள் தாம் பெறவேண்டியதைப் பெற்று இனிப் பிறவி எடுக்காத வகையில் நின்றால், அவர்களுக்கு இந்த உடம்பிலிருந்து பிரியும் மரணம் விடுதலைக்கு வாசலாக உதவுவது. அது மரணம் ஆகாது. அவ் வாறின்றி உலகத்தில் பற்றுக்களில் ஆழ்ந்து இந்த உடம்பை விடுவதற்கு மிகவும் வருந்தி இறந்து போகிறவர்கள் வேறு பிறவியை எடுக்கிறார்கள். அவர்களுடைய இறப்புத்தான் மரணம் ஆகும். இந்த வேறு பாட்டைப் பற்றியும் முன்பு பல முறை சிந்தித்திருக்கிறோம். அருணகிரிநாதர் மரணத்தைக் கண்டு அஞ்சாதவர். அவருடைய உறுதிப்பாட்டைப் பலபடியாகக் கந்தர் அலங்காரத்தில் சொல் வதிலிருந்து தெரிந்து கொண்டிருக்கிறோம். 'எமனுக்கு நான் அஞ்சமாட்டேன்' என்று சொல்வார். 'எமனே, நான் உனக்கு அஞ்சமாட்டேன்' என்று வேறு வகையில் சொல்வார். 'எமனே, என் முன்னாலே வா; உன்னை என்ன செய்கிறேன் பார் என்று 434