பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/456

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயன் களான மக்கள் இறைவனைத் தெரிந்து கொள்வதற்கும், தம் முடைய குறைகளைத் தெரிந்து கொள்வதற்கும் உரிய வல்லமை இல்லாமல் இருக்கிறார்கள். அவர்களுக்குத் தங்கள் குறைகளை எம்பெருமானிடம் எடுத்துச் சொல்வதற்குரிய ஆற்றல் இல்லை. ஆகவே இறைவனுடைய பெருமையை உணர்த்தி, மக்களுடைய குறைகளையும் எடுத்துச் சொல்லி, அவனிடத்தில் எப்படி அணுகி விண்ணப்பம் செய்வது என்பதையும் காட்டவேண்டுமென்ற நோக்கத் தில் பெருங்கருணை வள்ளலாகிய அருணகிரிநாதப் பெருமான் இந்த நூலை இயற்றினார். தம்முடைய உள்ளத்தில் கந்தப்பிரா னால் கிடைத்த இன்ப உணர்ச்சி பொங்கிவர, பரந்து நின்ற தம் அறிவு துணை செய்ய, இதைப் பாடினார் என்று சொல்லலாம். ஆனால் அதைவிட மககளிடத்தில் உள்ள பெருங்கருணையினால் சொன்னார் என்பதே பொருத்தம். ஆகையால் இந்த நூலைப் பாடியதால் வரும் பயன் இன்னது என்பதைச் சொல்ல வந்தவர் முருகப் பெருமான் அடையும் புகழ் என்றோ, நான் இறை வனுடைய அருள் அநுபவம் பெற்றது என்றோ சொல்லவில்லை. இதனைப் படிக்கின்றவர்கள் இன்ன பயனைப் பெறுவார்கள் என்றே சொல்கிறார். அருணகிரியார் கால நிலை அருணகிரியார் வாழ்ந்த காலத்தில் தமிழ் நாட்டில் முடி யுடைய மூவேந்தர்கள் ஆட்சி இல்லை. அவருடைய காலமாகிய பதினைந்தாவது நூற்றாண்டில் எங்கே பார்த்தாலும் சிற்றரசர்கள் வாழ்ந்தார்கள். சின்னச்சின்னத் தலைவர்கள் மகாராஜா என்ற பட்டம் போட்டுக் கொண்டு தம் ஆணையைச் செலுத்தி வாழ்ந் தார்கள். செல்வத்தால் உண்டாகும் போகங்களை அநுபவித்து இந்திரியங்களின் பசியைத் தீர்க்கவேண்டுமென்று அவர்கள் எண்ணியிருந்தார்கள். புகழுக்கு ஆசைப்பட்டார்கள். அதுகாரண மாகப் புலவர்கள் அவர்களை நச்சிப் பாடி இன்புற்றார்கள். இறைவனைப் பாடாமல் மனிதனைப் பாடும் துறையில் ஈடுபட் டிருந்தார்கள். பார காவியங்களைப் பாடும் ஆற்றல் இல்லாமல் சின்னச்சின்னப் பிரபந்தங்களைப் பாடிக் கொண்டிருந்தார்கள். பணம் பெருத்த இடத்தில் திருவருள் இல்லாவிட்டால் மற்றக் குறைபாடுகள் எல்லாம் தாமே வந்து சேரும். செல்வத்தைப் புலன் நுகர்ச்சியிலே செலவிடுவார்கள். ஆகவே, அரசர்கள் நீதி 447