இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நான்,
உன் முகத்தைத்
தாமரை என்று சொன்னால்
பொய் என்று சொல்;
உன் நெற்றியைப்
பிறை என்று சொன்னால்
பொய் என்று சொல்;
உன் இதழ்களைக்
கோவைப் பழங்கள் என்று சொன்னால்
பொய் என்று சொல்;
இப்படி
அடி முதல் முடி வரை
உன்னை அழகழகான வார்த்தைகளால்
அற்புதமான உவமைகளால்
வருணித்தால்
அவற்றையெல்லாம்
பொய் என்று சொல்;
வேண்டாம் என்று சொல்லவில்லை.
ஆனால்... ஆனால்
உன் இனிய வாயால்
என் காதலை மட்டும்
பொய் என்று சொல்லிவிடாதே!
77
111