இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நீ எனக்குத் தாகவெறி தந்தாய்
பிறகுதான் -
என் இதயம்
வறண்ட நிலமாய்க் கிடந்தது
எனக்குப் புரிந்தது
நீ என்னிடத்தில் பசியைக் கிளறினாய்;
பிறகுதான் -
என் ஆன்மா
ஒட்டிய வயிறாய் இருந்தது
எனக்குப் புரிந்தது.
உன்னால்
இந்தத் தாகம், இந்தப் பசி
நிரந்தரமாகத் தணியும்,
காரணம்
நீ ஆகாய கங்கை!
அமுத சுரபி!
3
13