இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சமீபத்தில்
உதக மண்டலம் போயிருந்தேன்.
நீலகிரியின்
மாயக் கவர்ச்சியில்
மயங்கிய நான்
மலர்க் கண்காட்சிக்குச்
சென்றிருந்தேன்.
அங்கே
இலையுதிர் காலத்தில் மலரும்
விதவிதமான பூக்களை
வைத்திருந்தார்கள்.
அதில்,
பன்னிரண்டு ஆண்டுகளுக்குப்
பிறகு மலர்ந்த
குறிஞ்சிப் பூக்களும் இருந்தன.
அவற்றைப் பார்த்துச்
சிலர் அதிசயித்தார்கள் -
நானோ
பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு
மலர்ந்துள்ள உன்னை
அந்தப் பூக்களுக்கிடையே
வைத்திருந்தால்
எவ்வளவு நன்றாக இருக்கும்
என்று எண்ணினேன்.
23
37