இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
உண்மையை ஒப்புக் கொள்கிறேன்;
நான் பேராசைக்காரன்தான்.
முதலில்
உன் இதழ்களால்
பால்போன்ற புன்னகைகளைச்
சிந்தினால் போதும்
வேறு எதுவும் வேண்டாம்
என்று எண்ணினேன்;
நீ என் எண்ணத்தைப்
பொய்யாக்கவில்லை.
அத்தோடு என் ஆசை அடங்கியதா?
பின்னர்,
உன் இதழ்களால்
தேன்போன்ற சொற்களைச்
சிந்தினால் போதும்
இதற்குமேல் எதுவும் வேண்டாம்
என்று ஏங்கினேன்;
நீ என் ஏக்கத்தைக்
கனவாக்கவில்லை;
அத்தோடும் என் ஆசை அடங்கியதா?
கொஞ்ச காலமாக
உன் இதழ்களால்
அமுதம் போன்ற.......
.......... .....
நான் பேராசைக்காரன் தான்.
25
41