இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சின்ன வயதில்
என்னை நன்றாக ஏமாற்றியிருக்கிறார்கள்.
கையில் அரிவாள்;
கண்ணில் கொலைவெறி,
நாவில் குருதிப்பசி,
கோரத் தோற்றம்
கொண்ட ஒரு சிலையைக் காட்டி -
“இதுதான்
உன் குலதெய்வம், கும்பிடு”
என்றார்கள்
நாம் கும்பிட்டேனோ, என்னவோ?
அமிர்தத்தின் மகளான
உன்னைக் கண்டபோது
யாரும் கூறாமலேயே
என் வாய்,
குலதெய்வம், குலதெய்வம்
என்று உச்சரித்தது;
என்னைக் கேட்காமலேயே
என் கை குவிந்தது.
இனிமேல்
என்னை யாரும் ஏமாற்ற முடியாது.
35
53