பக்கம்:கனவுகள் கற்பனைகள் காகிதங்கள்.pdf/66

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


பல நாட்கள்
உன் பின்னால் தொடர்ந்து வருகிறேன்
பண்ணையாருக்குப் பின்னால் வரும்
கூலிக்காரனைப் போல!

சில நாட்கள்
உன் கூடவே வருகிறேன்
பாதத்தில் ஒட்டியிருக்கும்
செருப்பைப் போல!

எனினும்,
நீ உன் வீட்டுக்குள் நுழையும்போது
என்னால் பின் தொடர முடியவில்லை;
கூட வரமுடியவில்லை.

வாசலில் நின்றவாறு
உன் வீட்டையே பார்க்கிறேன் .
எல்லையில் நின்றவாறு
நாடு கடத்தப்பட்ட ஒரு தேசாபிமானி
தன் நாட்டை ஏக்கத்தோடு பார்ப்பதைப் போல!


 

43

64