இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நீ தொடங்குகிறாய்;
“ஊருக்குப் போகிறேன்;
உங்களுக்குச் சங்கடமாக இருக்கிறதா?”
“ஆமாம் இரண்டு நாட்களுக்குச்
சங்கடமாகத்தான் இருக்கும்”
“அப்படியானால்
அதற்குப்பின் சங்கடமாயிருக்காதோ?
சரியாய்ப் போய்விடுமோ,”
- நீ ஊடிப் பிணங்குகிறாய்.
“அதற்குப் பின்தான்
நீயே வந்து விடுவாயே.
இரண்டு நாட்களுக்கு மேல்
என்னைப் பிரிந்து உன்னால்
இருக்க முடியாதே”
- நான் உன் ஊடலை அணைக்கிறேன்.
உன் முகம்
பெளர்ணமிப் புன்னகை சிந்துகிறது.
60
85