இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நான் உனக்குப் பூச்சூட்டுகிறேன்.
நீ சிரிக்கிறாய்.
புதிதாய்த்
தானம் கொடுக்கப் புறப்பட்டவன்
ஆள் தெரியாமல்
கர்ணன் வீட்டுக்
கதவைத் தட்டுவதைப் போல் -
புதிதாய்ச்
சாற்றுக்கவி பாடப் பழகியவன்
அடையாளம் தெரியாமல்
கம்பன் தெருவில்
கால்வைப்பதைப் போல்
நான் உனக்குப் பூச்சூட்டுகிறேன்.
பூங்கொடியே,
நீ சிரிக்காமல்
என்ன செய்வாய்?
61
86