பக்கம்:கனவுகள் கற்பனைகள் காகிதங்கள்.pdf/88

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


நான் உனக்குப் பூச்சூட்டுகிறேன்.
நீ சிரிக்கிறாய்.

புதிதாய்த்
தானம் கொடுக்கப் புறப்பட்டவன்
ஆள் தெரியாமல்
கர்ணன் வீட்டுக்
கதவைத் தட்டுவதைப் போல் -

புதிதாய்ச்
சாற்றுக்கவி பாடப் பழகியவன்
அடையாளம் தெரியாமல்
கம்பன் தெருவில்
கால்வைப்பதைப் போல்

நான் உனக்குப் பூச்சூட்டுகிறேன்.

பூங்கொடியே,
நீ சிரிக்காமல்
என்ன செய்வாய்?

 


61

86