பக்கம்:கனிச்சாறு 1.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  105


வரையறு சொற்கள், வான்சீர்ப் பெரும்புகழ் 200
முற்றுங் கொண்டது முத்தமிழ் மொழியே!

கற்றிடக் கற்றிட உளங்கனி விப்பதும்,
மெய்ம்மை கொளுத்தி மேலுக் குய்ப்பதும்,
செய்வினைத் தூய்மை, சீர்மை, ஒழுக்கம்,
உயிர்களுக் கூட்டி உறுதுணை நிற்பதும்,
மயர்வறு வாழ்வை மாந்தர்க் களிப்பதும்,
செந்தமிழ் செய்பயன்!

பிறமொழி தாமும்
எந்தமிழ் மொழிபோல் இயற்கையே எனினும்,
பூத்துக் காய்த்துப் புடைநலங் கனிந்த
மாத்தமிழ் மொழிபோல் மனவொளி கொளுத்தும்
ஆற்றலும் முதுமையும் அற்றன வென்பேன்;
மாற்றுரை கூறின் மறுப்புரை தருவேன்.

ஒலித்திறம் வரித்திறம் ஒத்த பொருட்டிறம்
வலித்திறம் மெலித்திறம் வாய்ந்த மொழித்திறம்
மொழிபயில் இலக்கியம் முகிழ்த்த இலக்கணம்
ஒழுகுமெய் யுணர்வின் ஊற்றொடு பல்திறம்
ஆயிவை தமிழில் ஆழ்ந்து கிடப்பதை
ஏய முறையினால் இயம்பு நூல் அறிமின்!
இற்றைக் கியல்வன இனிமேல் எழுவன
முற்றும் செந்தமிழ் மொழிக்குள் அடக்கம்! 220
வாயுரை யன்று; வாய்மை உரையிது!
தாய்மொழி வெறியால் தருக்குரை அன்று!
தகைநலம் இன்றித் தாயெனும் உரிமையால்
மிகைநலங் கூறலை மேன்மையர் செய்யார்!

அத்தகு அடிப்படை ஆர்வ முதிர்ச்சியால்
முத்தமிழ் மொழியின் முதுநலம் முழக்கியும்
எந்தமிழ் நாட்டில் இந்தி நுழைவதை
வெந்த உளத்தொடும் உரையொடும் விலக்கிட
எண்ணரும் வகையால் எடுத்து விளக்கியும்
பண்ணலங் கூட்டிப் பாட்டிலும் எழுத்திலும் 230
எழுதிக் காட்டினேன்! எந்தமிழ்த் தோழரீர்
பழுதென அவ்வுரை அவர்க்குப் பட்டதால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_1.pdf/132&oldid=1419252" இலிருந்து மீள்விக்கப்பட்டது