பக்கம்:கனிச்சாறு 1.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10 கனிச்சாறு – முதல் தொகுதி


29.

சுவைத்தவா யூறிநிற்கும் செம்பொருளை விண்டு கண்டு
துவைத்திடு நெஞ்சுக் கேயோர் இன்பத்திற் கொப்புண்டோ,வேந்
தவைத்திடு வாழ்த்துப் பெற்றோய் அல்லலைப் பெற்றோன் கண்டும்
சுவைத்திடு வாழ்வைத் தாராய் சுரும்புநான் மலர்நீ யன்றோ!

30.

சூட்டினார் புலவர் பன்னூல் சூழ்ந்துள்ள வறுமை உந்தும்
வாட்டத்தைப் போக்கா தன்னார் வாணாளைத் தீநாள் ஆக்கி
மேட்டிமை பெற்றாய் தீய வஞ்சனை கண்டும் உன்னை
ஏட்டிலே தோய்ப்பேன் நீயோ வாழ்வினைத் தீயிற் றோய்ப்பாய்!

31.

செம்மொழித் திருவே! என்னைச் சேர்ந்த நற்கலையே!
(வாழ்வின்
மும்மொழிப் படையே! உள்ளம் மூழ்கின்ற அன்பே! ஞாலத்
தெம்மொழி ஒன்றே ஏற்றம் உண்டென உணர்த்தி மக்கள்
மம்மரை யறுப்பேன்; என்றன் மனையினிற் குடிசேர் வாயே!

32.

சேராது தனித்தி யங்கும் செந்தமிழ் நாட்டாட் சிக்கே
ஓராது தீங்கு செய்யும் உணரார்க்கே உணர்த்து மாற்றான்
ஆறாது கதறும் வாயை ஆற்றாமற் கேடு செய்யும்
வேறார்க்குத் துணையாய் நிற்பாய்! விரிமதி கொள்ளாய் வாழி!

33.

சொல்லொன்றை யெண்ண லின்பஞ் சுவடியி லெழுத லின்பஞ்
சொல்லொன்றைச் சொல்ல வாய்க்குச் சொல்லொணா
(வின்பஞ் சொன்ன
சொல்லொன்றைக் கூர்ந்து கேட்டசெவிக்கின்பம் செவியிற்பட்ட
சொல்லினால் உடற்கே இன்ப மைவகை யின்ப மம்மா!

34.

சோர்வுற்ற பொழுதிலேயோர் செந்தமிழ்ப் பாடல் உண்டால்
ஆர்வற்ற உள்ளத் திற்கோ ராயிர மின்பம்; வந்து
நேர்வுற்ற துயரால் உள்ளம் நைந்திடும் போழ்தில் காதிற்
சேர்வுற்ற தமிழ்ச்சொல் லம்மா சேர்ப்பது கோடி யின்பம்!

35.

ஞமலியொன் றிரவிற் றோயுங் திங்களைக் குரைப்ப தொப்பத்
தமநலம் மறந்தே இன்பத் தமிழினைப் பழிப்பார்க் கெல்லாம்
எமதுநா விளக்கஞ் சொல்லு மேற்றத்தை விளைக்கு மானா
லுமதுநா கலிநோய்க் காற்றா துட்டகும் பவள வாயே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_1.pdf/37&oldid=1419415" இலிருந்து மீள்விக்கப்பட்டது