பக்கம்:கனிச்சாறு 2.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௨௯

கனிச்சாறு இரண்டாம் தொகுதி


122. உலகத் தமிழின முன்னேற்றம் குறித்துச் செயல்படுவதே தம் உயிர்மூச்சு என்கிறார் பாவலரேறு.

123. மொழிநலம், இனநலம் கருதாத உலுத்தர்களாய்த் தமிழர்கள் இருப்பது குறித்துக் கவலுற்றுப் பாடியது.

124. அசாமில், பஞ்சாபில் பெரியார்போல், பாவேந்தர்போல் யாரும் பிறந்திடாவிடினும் அங்கெலாம் நேர்ந்த எழுச்சி இங்கு மட்டும் இல்லாமல் போனதை இடித்துக் காட்டுகிறார் பாவலரேறு.

125. தமிழர்தம் பழம்பெருமைகளை யெல்லாம் சிறப்புற விரித்து இருப்பினும் என்ன, இன்று இவர்கள் அடிமைகள் என உளம் வருந்திச் சொல்லும் பாடல் - அழகிய வெளிப்பாட்டில்.

126. இனநலம் பேணி உழைத்திடல் ஒன்றே நன்று என்றுரைக்கிறார் பாவலரேறு.

127. தீவிரப் பொதுவுடைமைத் தோழர்களான புலவர் கலியபெருமாள், தமிழரசன் மற்றும் மார்க்கசிய சிந்தனையாளர் பலரும் தமிழ்த்தேசிய மீட்பில் கருத்துச் செலுத்தி நம் பாவலரேறு அவர்களொடு தொடர்புகொண்ட காலம் அது. அக்கால் ஐந்து இயக்கங்கள் இணைந்து ‘தமிழக மக்கள் விடுதலைக் கூட்டணி’ அமைத்து அதன் நெறியாளராய் ஐயா அவர்களைத் தேர்வு செய்தன. எனவே அச்சூழலின் வெளிப்பாடாய் இவ் வெழுச்சிப்பாடல் அமைந்தது. பகைவரைத் தேடித் தீக்குள் வீசச்சொல்லும் நெருப்பு வரிகள், உணர்வின் பிழம்பு...

128. பொதுமை உணர்வில்லாமல், தொண்டுணர்வில்லாமல் அழிகின்ற தமிழர் கூட்டத்தை எண்ணித் தனியாய்த் தொண்டாற்றுகிற தமிழ நெஞ்சத்திற்குத் தேறுதலாய் அமைந்தது இப்பாடல்.

129. ‘தமிழ்ச்சிட்டு’களுக்கும், அடிப்படையிலேயே தமிழ்மக்களின் அடிமை உணர்வினை உணர்த்தி, இன உணர்வால் எழுச்சி கொள்ள வைக்கும் பாடல்.

130. தமிழினத்தார் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் அடிமையுணர்வொடு பிழைத்துக் கொண்டிருக்கையில் நல்விளைவு எவ்வாறு தழைக்கும் என வருந்திப் பாடியது.

131. தமிழினத்தை ஒருங்கிணைக்க இருக்கும் தடைகளையெல்லாம் தவிர்த்து விட்டுச் சோர்வின்றி உழைத்திட விரைந்து வர அழைக்கிறார் நம் ஐயா அவர்கள்.

132. வெற்றிக்குப் பலகோணம் உண்டு என்பதைப் பாவலரேறு ஐயா அவர்கள் தெள்ளத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறார்.

133. தமிழுக்கும், தமிழருக்கும் உழைப்பாரே தம் நண்பர் என்றும், அதற்கு மாறானவர் எந்நிலையர் ஆயினும் அவர் பகைவரே என்றும் அறைந்துரைக்கிறார் பாவலரேறு.

134. பேரா(சை)சிரியர் ஒருவர் ஐயா அவர்கள்மீது காழ்ப்புக் கொண்டு எட்டப்பராகித் தென்மொழி, தமிழ்நிலம் இதழ்களில் வெளிவந்த தமிழ்நாட்டு விடுதலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/27&oldid=1437289" இலிருந்து மீள்விக்கப்பட்டது