இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பாவலரேறு பெருஞ்சித்திரனார் ☐ 97
இந்தக் குழந்தைகள்
பிறக்கையில் பெற்றோர்
எது நினைத் தாரோ தெரியவில்லை!
இந்தக் குழந்தைகள் துமுக்கிக்கே
இரையா கும்என அறியவில்லை!
பயிர்களை அழித்திடும்
பூச்சிகள் கொன்றிடப்
பற்பல மருந்துகள் கண்டறிவோம்!
உயிர்களை அழிக்கும்
சிங்களக் கொடியரை
ஒழித்திடும் மருந்தெது?
விண்டறிவோம்!
-1986
88 அழுகிறாய் கண்ணே! அழாதே !
அமிழ்த வாய் திறந்தே
அம்மா அம் மாவென்(று)
அழுகிறாய், கண்ணே!-அழாதே!
தமிழீழம் பெற வுன்
தாயும் தந்தையும்
தம்முயிர் தந்தனர்-அழாதே!
சிங்களக் கொடியர்
சிதைத்த தமிழருள்
சிக்கினர் அவர்களும்!- அழாதே!
இங்குனக் காயிரம்
பெற்றோர் இருக்கையில்
ஏனழு கின்றாய்?-அழாதே!
நம்மவ ருக்கொரு
நாடு கிடைத்திடும்!
நலம் வரும் உனக்கும்!- அழாதே!
அம்மா, அப்பா,
அண்ணன், அக்கையாய்
அனைவரும் இருப்போம்!- அழாதே!
-1986