பக்கம்:கனிச்சாறு 3.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 101


92  புலியோ புலி!

புலியோ புலிபுலி புலிபுலி!
பொங்கிப் பாயும் மறப்புலி!
வலிவோ வலி! ஆனால் இந்திய
வஞ்சப் படைக்குப் பலி பலி பலி!

ஆண்ட தமிழர் மாண்ட உரிமை
அனைத்தும் மீட்கும் திறப்புலி!
நீண்ட முயற்சி செய்து கழுத்தை
நெரித்த படைக்குப் பலி பலி பலி!

செந்தமிழ் மறவன் பிரபா கரனின்
சீறும் மறவர் புலிப்படை
இந்தியப் படைக்குத் தவிப்புக் காட்டி
ஈகம் செய்தது வெளிப்படை!

ஈழத் தமிழர் உரிமை கோரும்
எழுச்சி கொண்ட வீரர்கள்!
பாழும் இனத்தை மீட்கத் துணிந்த
பாண்டிய சோழ சேரர்கள்!

அடிபட் டோய்ந்த புலிகள் மீண்டும்
அதர்ந்து வீறும் நாள்வரும்!
குடிகள் அழுத கண்ணீர் அவர்க்குக்
கொடுமை வீழ்த்தும் வாள் தரும்!

-1987
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_3.pdf/130&oldid=1424622" இலிருந்து மீள்விக்கப்பட்டது