பக்கம்:கனிச்சாறு 3.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  105

எந்தமிழ் இனமே! இன்னும்
எத்தனை ஊழிக் காலம்,
எத்தனை ஆட்சி யோர்க்கே,
இருப்பாய்,நீ அடிமை யாக?
சொந்தத்தைப் பகைக்கின் றாய், நீ!
சொந்தத்தை வெறுக்கின் றாய், நீ!
சொந்தத்தை இரண்ட கத்தால்,
சூழ்ச்சியால் அழிக்கின் றாய் நீ!
எந்தச்சூழ் நிலையிலும், நீ
எதிரியை நம்பு கின்றாய்!
எதிரிக்கே உழைக்கின் றாய்,நீ!
எதிரியை வாழச் செய்வாய்!
செந்தமிழ் மொழியை நம்பு!
செந்தமிழ் இனத்தை நம்பு!
செந்தமிழ் நாட்டை மீட்க
ஒன்றுசேர்! செயல்முழக்கு! 5

-1987
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_3.pdf/134&oldid=1424626" இலிருந்து மீள்விக்கப்பட்டது