பக்கம்:கனிச்சாறு 3.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112  கனிச்சாறு - மூன்றாம் தொகுதி

ஐந்து கோடித் தமிழர்கள் இங்கே
உனக்காக அன்றாடம்
தவமிருக்கிறோம்!
உயிர் நோன்பு நோற்கிறோம்!
உன்னை நோக்கி
உழலும் உயிரைத் தேக்கி,
உன் கொள்கை முயற்சியை ஊக்கி
உனக்குதவுவோம் பகையைப் போக்கி!
செங்களம் துழாவும்
செங்கதிர்க் கையனே!

எங்களை விடுவிக்க வந்த ஏந்தலே!
எங்கே நீ இருக்கிறாய்!
அங்கே நாங்களும்
உன் உடனே இருக்கிறோம்!

அஞ்சாதே! நீ!
அனைவரும் உன்
உயிரோடு உயிராய்ப்
பின்னிப் பிணைந்திருக்கிறோம்!

ஆற்றல் மறவனே!
அமைந்ததடா விடுதலை ஈழம்!
அழியாமல் விளங்கிற்றடா உன் புகழ்!
நீ வாழ்க!
உன் கொடிவழி வாழ்க!

-1988


98  இட்ட சாவம் முட்டுக!


முண்டையின் மகனே! முண்டையின் மகனே!
கொண்டையில் லாத ஒழுகிய முழக்குழல்
கூர்த்த கலுழன் வெவ்வாய் மூக்கின்
ஆர்த்த செருக்கோ டாண்மையின் தோற்றத்து
நாவலந் தீவின் நாயகி யென்ன
மேவலந் திரிந்த அரசியல் மேனகை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_3.pdf/141&oldid=1424634" இலிருந்து மீள்விக்கப்பட்டது