இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பாவலரேறு பெருஞ்சித்திரனார் ☐ 17
14 வழி பிறிதுண்டோ?
மொழிநலம் உணரார்; மக்கள்
முழுநலங் கருதார்; தீய
பழிமிகத் துணிவார்; ஈட்டம்
பதுக்குவார்; உரையால் ஏய்ப்பார்;
அழிவழக் கிடுவார்; இன்னோர்
அமைச்சரென் றமர்வா ராகில்
வழிபிறி துண்டோ? நாடு
வளம்பெறல் குதிரைக் கொம்பே!
-1965
15 தமிழ்நாட்டு நிலை!
பொற்பிழப்பால் நலந்தேடிப் புனைசுருட்டால்
பொருள்சேர்க்கும் பொய்ம்மை மாந்தர்;
கற்பிழப்பால் கலைகற்றுக் கருவழிப்பால்
கலைவளர்க்கும் கயமைப் பெண்டிர்;
சொற்பொழிவால் தொண்டாற்றித் திரைப்படத்தால்
தமிழ்வளர்க்கும் தலைவர் கூட்டம்;
மற்போரால் பெரும்பணத்தால் அரசமைக்கும்
மதிகேடர்; தமிழர் நாட்டே!
-1965