பக்கம்:கனிச்சாறு 3.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42  கனிச்சாறு - மூன்றாம் தொகுதி


42 
அனைத்து முன்னேற்றங்களுக்கும் ஒரே வழி
தமிழ்நிலம் தன்னுரிமை பெறுதலே!

அரசியலால் முன்னேற்றம் காண்பதற்கென் றிங்கே
அளவிறந்த கட்சிகளும் இயக்கங்களும் உண்டு.
'சரிசமநன் னிலைவேண்டும் பொருளியலில்; பின்னர்ச்
சரியாய்ப்போம் தமிழினமுன் னேற்ற'மென்றே ஓங்கி
முரசறைவர் பொதுவுடைமைக் கொள்கையினர்! மற்றும்
முழுமூடக் கொள்கைகளும் பலமதமும் சாதி
இருசுமொடிந் திடுகவென்பார் பகுத்தறிவார் என்போர்!
எந்தமிழ்முன் னேறட்டும் என்றுரைப்பார் சில்லோர்!

'இருக்கட்டும் இந்துமதம், புராணவே தங்கள்,
இதிகாச உபநிடதங்கள்; இவைதம்மா லன்றோ
உருக்கெட்டும் உளங்கெட்டும் அறிவுகெட்டும் மக்கள்
உணர்வுகெடா திருக்கின்றார் அதுபோதும்' என்றே
செருக்கெட்டும் மூளையினை அகல்வாயாய்க் கொண்டே
சிருங்கேரி காஞ்சிமட 'அதிபதிகள்' எல்லாம்
திருக்கொட்டும் உண்டியலைக் கணக்கிட்ட வாறு
திசையெல்லாம் எட்டுகின்ற புளுகுரைத்து வாழ்வார்!

வடநாட்டுத் தலைவரெலாம் 'இந்திமொழி கற்றால்
வளம்பெருகும் பாரதத்தில்' என்றுரைப்பார் நாளும்!
இடநோட்டம் ஆள்நோட்டம் பகலிரவு நோட்டம்
எதிர்ந்துவரும் பணநோட்டம் அனைத்தையுமே பார்த்துக்
கடனாற்றும் நந்தமிழ அமைச்சரெல்லாம் இங்கே
காவலர்கள் துணையோடு விழாவேடிக் கைகள்
உடனாற்றும் உரைவிளக்கம் விளம்பரங்கள் என்றே
ஊருக்கூர் நடந்தாலே முன்னேற்றம் என்பார்!

இந்தியினைப் பரப்புதற்குப் பலமாநா டங்கே!
இந்தியினை எதிர்த்திங்கே பற்பலமா நாடு!
முந்தியர சாட்சிசெய்த ஊழல்களை ஆய
முயற்சிபல; பொருள் கோடி முடிவுமட்டும் முட்டை!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_3.pdf/73&oldid=1424564" இலிருந்து மீள்விக்கப்பட்டது