பக்கம்:கனிச்சாறு 3.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60  கனிச்சாறு - மூன்றாம் தொகுதி

60 
உரிமைக் கோரிக்கையின்
குரல்வளைகளை நெரிக்காதீர்!


வன்முறை என்றே உரிமைக்கோ ரிக்கையின்
குரல்வளை களைநெரிக் காதீர்!
மென்முறை என்றே ஏமாற்றுக் காரரின்
எத்துக்குத் துணைபோ காதீர்!

ஆட்சிக்கு வந்த அரக்கரே! உங்கள்
ஆவணம் கிழிபடும் ஒருநாள்!
மாட்சிமைக் குரிய மாண்புக ளே,உம்
சட்டங்கள் தீப்படும் ஒருநாள்!

மக்களை ஒடுக்கிடும் மமதையின் போக்கு
மண்ணிலே புதைபடும் ஒருநாள்!
பொக்குகள் போலவே சுட்டுப் பொசுக்கிடும்
புன்செயல் மிதிபடும் ஒருநாள்!

அதிகாரக் கொடுமையர் ஆட்சியை அகற்றிட
ஆண்களும் பெண்களும் திரள்வீர்!
மதியாத போக்கும் மக்களின் துயரும்
மாய்ந்திடும் மாய்ந்திடும் உணர்வீர்!

-1987
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_3.pdf/89&oldid=1424582" இலிருந்து மீள்விக்கப்பட்டது