இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பாவலரேறு பெருஞ்சித்திரனார் ☐ 135
88
நாம் தமிழரல்லர் !
பள்ளென்போம்; பறையென்போம் நாட்டாரென்போம்!
பழிதன்னை யெண்ணாமல் வண்ணா ரென்போம்!
பிள்ளையென்போம்; முதலியென்போம்;
நாய்க்கர் என்போம்!
பிழைநாணா தருந்ததியர், படையா ளென்போம்!
எள்ளல்செய் திழிக்கின்றோம்; தாழ்விக் கின்றோம்!
எண்ணுங்கள்; நமைத் ‘தமிழர்’என்கின் றோமா?
குள்ளமனப் பான்மையிது தொலையு மட்டும்
கூசுங்கள்; நாணுங்கள்; தமிழ்நாட் டாரே!
-1959
89
நெறி காணீரே !
கல்லாலும் செம்பாலும் பண்ணிவைத்த
படிவத்தைக் ‘கடவுள்’ என்றே
நல்லாவின் பாலாலும் நெய்யாலும்
வழிபாடு நாளும் செய்தே
எல்லாரும் அவர்பெற்ற மாந்தரென்பீர்!
ஆனாலும் எண்ணற் றோரைச்
சொல்லாலும் மக்களெனச் சொல்லுகிலீர்;
தாழ்த்துகின்றீர்; நெறிகா ணீரே!
-1960