இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பாவலரேறு பெருஞ்சித்திரனார் ☐ 137
பணிவினார் தம்மிடைப் பகைவரைப் பார்த்தேன்!
பசியிலார் ஊண்பெறக் கொதித்தேன்!
பிணியினார்க் கிரங்கிலாப் பித்தர்கண் டடுத்தேன்!
பிணியிலார் மருந்துணச் சினந்தேன்!
துணிவினார் நெஞ்சினுட் டுணுக்குகண் டிழித்தேன்!
துயரிலார்க் கிடுதல்கண் டகன்றேன்.
வணிகனார் கைவாய் வரும்படிக் கயர்ந்தேன்.
வல்லிருள் உலகுகண் டேனே!
5
-1961
91
அறுவடை செய்கிறார்கள்!
அறுவடை செய்கிறார்கள்! - இங்கே
அறுவடை செய்கிறார்கள்!
திருவடை யாமலே திண்ணையில் வீதியில்
தெருவோரச் சாய்க்கடை புழக்கடை நடுவினில்
எருவடை குழிகளில் ஈக்களாய், புழுக்களாய்
இறக்காமல் மொய்க்கின்ற ஏழ்மையைச் சொல்லியே,
அறுவடை செய்கிறார்கள் - இங்கே
அறுவடை செய்கிறார்கள்!