160☐ கனிச்சாறு – நான்காம் தொகுதி
உரிமை கொண்டதால், உலகுடை யவன்போல்
30
ஆடுங் கோழியும் அறுத்தெறி வானாய்ப்
பீடும் பெருமையும் பெற்ற மக்களைச்
சிதைத்திடுங் கொடுமைக்குச் சிறிதா கிலும்-உளம்
பதைத்தி டாமலே, பதைப்பினுந் துடித்தெழா(து)
ஒக்கலுந் தாமுமாய், உண்டு களித்திடும்
35
மக்களும் இருப்பரோ! மக்களும் இருப்பரோ!
அறிஞரும் உளர்கொல்! அறிஞரும் உளர்கொல்!
வெறியெலாம் அமைந்துரு வான,ஓர் வெங்கணான்
ஆட்சியைக் கைப்பறித் தாள்திறன் அற்றதால்
மீட்சி பெறவிழைந் தெழுந்த மேன்மையோன்
40
முசிபுர் இரகுமான்-எனுந்தலை முதல்வனை
நசித்திடச் செய்திடும்
வெறியினால், நாட்டினைப்
பொட்டல் நிலமெனப் பொசுக்கியும், மக்களை
நட்ட நடுத்தெரு
நாய்களைப் போலவே
பட்டப் பகலினில், படைகளை ஏவிச்
45
சுட்டுத் தள்ளியும்,
வெட்டிப் புதைத்தும்
மதங் கொண்டிருக்கையில்-
மண்ணுக்கும் விண்ணுக்கும்
மிதந்திட விழைந்து மேலும் மேலும்
அறிவியல் நாட்டமுற் றாய்வு நடத்திடும்
அறிஞரும் உளர்கொல்! அறிஞரும் உளர்கொல்!
50
அறமும் உண்டுகொல்! அறமும் உண்டுகொல்!
மறமும் கொடுமையும்
மருவிப் பிறந்த, ஓர்
பட்டி யரம்பன், இப் பாரெலாம் நடுங்கிட-
தட்டிக் கேட்க, ஓர் தகுவோன் இன்மையால்,
புலைமையும் கொலைமையும்
பொய்ம்மையும் தாம்பயில்
55
கலைகள் எனத்தன் கைத்திறங் காட்டல்போல்
கீழ்வங் காளத்துக் கேண்மையோர் தம்முயிர்
ஆழ்வெங் கடலுளே ஆழ்த்துவா னாயினான்!