இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பாவலரேறு பெருஞ்சித்திரனார் ☐ 179
அடிமைத்தீ அவிந்ததடா!
முதலாளர் ஆட்சி
அகன்றதடா; எழுந்ததடா
தொழிலாளர் மாட்சி!
குடிமைநலம் சிறந்ததுகாண்!
உழைப்பாளர் கூட்டம்
கூடினகாண்! பாடினகாண்!
குவிந்ததடா ஈட்டம்!
(உலகம்
வாழ்)
நீல்வானம் செங்கதிரால்
சிவந்தது,பார் எங்கும்!
நிலமெல்லாம் தொழிலாளர்
புரட்சிஇனிப் பொங்கும்!
மேல்கீழாம் வேற்றுமைகள்
அகன்றன பார்! இன்பமும்,
மேம்பட்டு வளர்ந்ததடா!
இல்லையினித் துன்பம்!
(உலகம்
வாழ்)
-1983