பக்கம்:கனிச்சாறு 4.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  191


133

பொலிந்திடும் பொதுமையே !


சாதியை விட்டொழி;
சமையத்தைப் புறக்கணி!
ஓதி உணர்ந்த
உணர்வினால் மெய்யுணர்!

அனைத்து நிலையினும்
பிறவி எடுத்துள
அனைத்துமாந் தரையும்
அன்பினால் ஒன்றென!

எண்ணும் உணர்வினை
இனியேனும் வளர்த்து வா!
உண்ணலும் உடுத்தலும்
உறையுளும் பொதுவே!

உடைமையைச் சமன்செய்!
‘உளன்’ எனும் ‘இலன்’ எனும்
நடைமுறை நிலைகளை
நடு நின்று மாற்று!

வையம் புதுமைசெய்!
வருந்தடைகள் உடை!
பொய்யைத் தகர்த்தெறி!
பொலிந்திடும் பொதுமையே!

-1989
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/226&oldid=1444541" இலிருந்து மீள்விக்கப்பட்டது