இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பாவலரேறு பெருஞ்சித்திரனார் ☐ 199
142
நிலை என நிறுத்துவாய் உனை !
மதம் ஒரு புறம்உனைப்
பற்றி யிழுக்கும்; மடமை தரும்!
நிதம் உனைச் சாதிப்
பிறவியும் நின்றே நினைவூட்டும்!
பதவிகள் பணங்கள்
பளிச்சிடும் அரசியல் பழகவரும்!
எதெதற்கு நீ, உனை
இழப்பது? தம்பி,நன்(கு) எண்ணிடுவாய்!
கலை,காமக் கனவுகள்
உன்மனம் கலைக்கும்; கால்இழுக்கும்!
வலைகள் அவை! உனை
வயப்பட வைக்கும்; வாழ்வழிக்கும்!
விலைமதிப் பற்றதுன்
நிலையென நிறுத்துவாய்,
வாழ்க்கை! விலங்கில்லை; பறவையில்லை!
உனை! நல் அறிவினால், நெடுந்தொண்டால்!
-1992