இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
220 ☐ கனிச்சாறு – நான்காம் தொகுதி
புதைசாணிப் புழுக்களென நெளிகின்ற ஏழை
பொய்வாழ்க்கை நீங்கி நலம் மேலேறும் நாளை
எதிர்நோக்கிக் கிடக்கின்றேன்; எழுச்சிநிலை வந்தே
எல்லாமிங் கெல்லார்க்கும் என்றிடும்நாள் என்றோ!
(அதுதான்)
1982
160
மன்னிய கொள்கை ஏழும்
மலர்க இத் தமிழ்ஞாலத்தே!
மின்னிய தமிழும், சாதி
மதமிலா இனமும், வாய்மை
முன்னிய அரசும், மக்கள்
முரண்படா உடைமைப் பேறும்,
நன்னறு கலையும், பண்பும்
நல்லறி வியலும் என்றிம்
மன்னிய கொள்கை ஏழும்
மலர்கவித் தமிழ்ஞா லத்தே!
-1982