பக்கம்:கனிச்சாறு 4.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 53



உடையினில், உரையினில், ஒழுக்கம் மிக்குயர்
நடையினில், பாணியில், நாகரி கத்தினில் 60
எவையெவை மாணவர்க் கேற்றமென் பீரோ
அவையா வற்றிலும் அவருமைக் கண்டு
பின்பற் றிடுமொரு பண்புடை யாளராய்
அன்புறக் காணுமா றாட்சி செலுத்துக!

அறிவையும் பண்பையும் அன்பினால் வளர்க்க!
அறிவையும் அன்பையும் பண்பினால் ஆக்குக!
அன்பையும் பண்பையும் அறிவினால் விளக்குக!
என்பும் நெகிழும் இனிய உரையினால்
எதிர்வரும் உலகை ஏற்று நடத்த,அப்
புதுத்தலை முறையினர் பூட்கை கொளும்படி 70
மலர்தல் செய்குவிர் மாண்பரீர்!
உலர்தலும் வளர்தலும் உலகத்து விருப்பே!

-1971
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/88&oldid=1440714" இலிருந்து மீள்விக்கப்பட்டது