இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
78 ☐ கனிச்சாறு - ஐந்தாம் தொகுதி
86 மலர்
செடியில், கொடியில்
மரத்தில் பூப்பாய்
மலரே! மலரே! மலரே! - உன்
சிரிப்பில் உள்ளம்
மகிழா தவர்கள்
இலரே! இலரே! இலரே!
விடியற் காலை
வீதிகள் எங்கும்
மணமே! மணமே! மணமே! - நீ
வீசு கின்றாய்!
என்னே உன்றன்
குணமே! குணமே! குணமே!
புவியில் உன்னைப்!
போற்றி மகிழ்ந்தார்!
பூவே! பூவே! பூவே! - உன்னைப்
புலவர் யாரும்
பாடி மகிழ்ந்தார்
பாவே! பாவே! பாவே!
குவியல் குவிய
லாகப் பூத்தாய்,
கோடி! கோடி! கோடி! - உன்னைக்
குலவிக் கொஞ்சத்
தும்பிகள் வருமே
நாடி! நாடி! நாடி!
வெள்ளை, மஞ்சள்
நீலம், சிவப்பு
வண்ணம்! வண்ணம்! வண்ணம்! - உன்னை
விரும்பிச் சூடாப்
பெண்கள் இல்லை;
திண்ணம்! திண்ணம் திண்ணம்!
பிள்ளைகள் முதலாப்
பெரியோர் வரையில்
உன்னை, உன்னை, உன்னை என்றும்
பேணி மகிழ்வார்!
பறிக்கச் செய்தாய்
என்னை! என்னை! என்னை!
-1966