இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
34 ☐ கனிச்சாறு - ஐந்தாம் தொகுதி
மாதுளம் பூவோ? கொப்பூழோ?
மழைவான் வில்லோ? ஒளியுடலோ?
தீதிலா நெஞ்சின் பெருநினைவோ?
தென்றற் காற்றே! துயிலாயோ?
-1969
35 அப்பா!
கையிலே ஒரு குடை!
காலில் செருப்பு நடை!
மெய்யில் வெள்ளை உடை!
மெதுவாய்ப் போவார் கடை!
'அப்பா' அதற்கு விடை;
அம்மா சொல்வாள் தடை!
தப்பாமல் ஓர் வடை
தருவாள் முதுகில்; துடை;
பாடஞ் சொல்லச் செய்வார்!
படிக்கா விட்டால் வைவார்!
ஆடல் பாடல் சொல்வார்!
அன்பைக் காட்டி வெல்வார்!
வேண்டும் பொருளைச் சேர்ப்பார்!
வீட்டை என்றும் காப்பார்!
நீண்ட மீசைக் காரர்!
நம்மேல் ஆசைக் காரர்!
-1969