இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பாவலரேறு பெருஞ்சித்திரனார் ☐ 55
61 அவள் இசை அமுது!
அவள் 'இசை’ அமுது!
அகவை மூன்றரை!
துவளா நெஞ்சினள்!
துடிதுடிப் புள்ளவன்!
அழகிய ஓவியம்,
அவள் திருவுருவம்!
பழகிய செந்தமிழ்
பயிலும் நாவினள்!
கருவண்டு விழிகள்
கவின்நிலா ஒளிமுகம்!
திருவளர் செல்வி
தீதின்றி வாழ்கவே!
-1980
62 ஊஞ்சல் ஆடு!
ஆடு ஊஞ்சல் ஆடு!
அன்னைத் தமிழ் பாடு!
பாடுபவள்; காதிரண்டில்
பச்சை மணித் தோடு!
காற்றில் முடி ஆடி,
கைவளைகள் பாட,
ஆற்றில் அலை பாய்வதுபோல்
அங்கு மிங்கும் ஓட,
ஆடு ஊஞ்சல் ஆடு!
-1981