இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
122 ☐ கனிச்சாறு – ஆறாம் தொகுதி
உள்ளமெனும் அன்னையெனக்குரைத்தவிடை யிஃதாம்!
உற்றவிடை கேட்டதன்பின் உடல்முழுதும் காந்த
வெள்ளமெனும் பேருணர்வால்சிலிர்சிலிர்க்க நின்றேன்!
விளக்கமிலாப் பலநிலைகள் விளங்கிடவும் கண்டேன்!
விள்ளரிய பெருமுழக்கம் என்னுளத்துள் கேட்டேன்!
வியனுலகப் பொருளனைத்தும் ஒன்றெனவு ணர்ந்தேன்,
எள்ளவொரு பொருளுமிலை; வாழ்த்தவொன்று மில்லை!
எண்ணவொரு நினைவுமிலை! மறக்கவொன்று மில்லை!
-1969
80
நடக்கின்ற செயலனைத்தும் நாடகமே!
நடக்கின்ற செயலனைத்தும்
நாடகமே என்றெண்ணிக்
கடக்கின்ற மெய்ந்நிலையைக்
கருத்தளவில் நாமுணர்ந்தால்
கிடக்கின்ற பொருள்களிலே
கீழேது மேலேது?
தடக்குன்றத் தோளுடையான்
தாள்பட்டுச் சிதறுவதே!
-1973