இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பாவலரேறு பெருஞ்சித்திரனார் ☐ 77
61
அருந்தமிழ் நினையுங்கள்!
என்னைப் பற்றி எழுதா தீர்கள்;
எந்தமிழ் மொழிக்கே எழுதுங்கள்!
என்னைப் பற்றிப் பேசா தீர்கள்;
இனமேம் பாட்டைப் பேசுங்கள்!
என்னைப் பற்றி இரங்கா தீர்கள்;
ஏழைத் தமிழர்க் கிரங்குங்கள்!
என்பை பற்றி வருந்தாதீர்கள்;
இனத்துக் காக வருந்துங்கள்!
மொழியை இனத்தை நாட்டை மீட்க
முனைந்து துணிந்து நில்லுங்கள்!
பழியைத் துயரைப் பார்க்க வேண்டாம்;
பணிசெய் கடமை பாருங்கள்!
இழிவை இழப்பை எண்ணாதீர்கள்;
இனத்தின் ஏற்றம் எண்ணுங்கள்!
அழிவைப் பற்றி நினையா தீர்கள்
அருந்தமிழ் ஆக்கம் நினையுங்கள்!
-1995