பக்கம்:கனிச்சாறு 7.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  81

கடுமைக் காய்ச்சலால் என்னினம் கலங்கக்
கொடுமைக் குளிரால் என்மொழி குலுங்க
நாட்டை நசுக்கும் நயவஞ் சகர்களின்
பாட்டைச் சிதைக்காமல் என்னுடல் படுப்பதா?
ஐயகோ! கொடுமை! அந்நிலை தாளேன்!
ஐயனே! எனையிங்கு அனுப்பிய மெய்யனே!
எனக்குஎன் கடமையை இயற்றிடும் வலிவு,தா!
எனக்குள் நீயிருந்து இயக்கிடல் பொய்யா? 110

-1995
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/126&oldid=1446175" இலிருந்து மீள்விக்கப்பட்டது