பாவலரேறு பெருஞ்சித்திரனார் ☐ 99
எடுத்த நெடுமா
மலையில் எழுந்தே எழில்மலர் மேல்
படுத்த மணம் புணர்ந்
தின்சுனைத் தண்ணீர் பயின்றுடலங்
கடுத்த நிலைதவிர்
தென்றலே! பாரதி தாசனிசை
மடுத்த செவிக்குள்
அவன்புகழ் பாடி மலர்த்துவையே!
5
மன்னும் பெரும்பெயர்ப்
பாரதிதாசன் மணித்தமிழைத்
தின்னுங் கிளியே!
தனித்தேன் தினைமா தினக்கொடுப்பேன்;
மின்னும் படியுயிர்
மீளும் படியவன் மேம்பெயரை
இன்னும் ஒருமுறை
சொல்லுவை யோசெவி இன்புறவே!
6
இழைத்த கொடுமையொன்
றில்லா திருக்க எனைச்சுடுவாய்,
மழைத்த முகில்வந்
தெழில்மறைக் காத மணிநிலவே!
தழைத்த பெரும் புகழ்ப்
பாரதிதாசன் தனிப்புலமை
குழைத்த தமிழ்போல்
குளிர்பொழி வாயோ குலமகட்கே?
7
ஆர்த்த கழகத்
தருந்தமிழ் மீதே அழிபகைவர்
போர்த்த பழியிருள்
நீக்க வெழுந்த பரிதியெனும்
கூர்த்த மதிதிகழ்
பாரதி தாசன் கொழுந்தமிழ் போல்
சீர்த்தி நினக்கிலை
யே, கடல் சீர்த்தெழு செங்கதிரே!
8