இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
184 ☐ கனிச்சாறு - ஏழாம் தொகுதி
142
‘பொங்கலோ பொங்கல்’ எனப்
பொய்விழாக் கொண்டாடுவதா?
இங்கோ அங்கோ என்
றில்லாமல் பல நாட்டில்
ஏதி லராய்,
எழில்தமிழும் இனஉறவும்
இழந்தும் கலந்தும்
இயல்பு மாறி,
மங்காமல் மங்கி, உயிர்
மடியாமல் உழல்தமிழர்
மறுபு றத்தே
மற்றிங்கு வாழ்பவரோ
மானமும் மதிப்பும்
மடிய விட்டே,
எங்கோ தொலைத்தஎம்
மொழியையும் இனத்தையும்
நாட்டி னையும்
எவரெவர்க்கோ விற்றுவிட்டே
இளைத்தும் களைத்தும்
இளித்துக் கொண்டே
‘பொங்கலோ பொங்கல்’எனப்
பொய்விழாக் கொண்டாடும்
புல்லி யர்க்கே
புதிதாக என்சொல்வோம்?
புத்துணர்வை எவ்வாறு
புகட்டு வோமோ?
-1994