பாவலரேறு பெருஞ்சித்திரனார் ☐ 191
பொய்யுணர் வின்றிப் புணர்ந்தனர்காண்!
புரைவினை யின்றி மணந்தனர் காண்!
ஐயுணர் வின்றி ஈரிருகால்
அறவழி நடந்திட இசைந்தனர்காண்!
பெய்மழைக் குலகம் பிழைசெய்மோ?
பெரும்பேர் இன்பம் பொழியாதோ?
மொய்யுணர் வெஞ்சொல் மெய்பெறுமேல்
மூன்றாம் பிறையே வளருதியே!
3
குலஞ்செய் குடிநலங் காத்தனர்காண்!
கூன்மொழிக் கவர்செவி கைத்தனர்காண்!
புலஞ்சேர்ந் துலகுயப் பயன்காட்டும்
பொய்யா மக்களைப் பெறுகுவர்காண்!
நிலஞ்சேர் வளங்கள் நேராவோ?
நேர்ந்தவர்க் கின்பம் தாராவோ?
நலஞ்செய் யெந்நா நலிவிலதேல்
நான்காம் பிறையே வளருதியே!
4
இழிவில் தலையறம் இணைந்தனர்காண்!
ஈடில் ஒழுங்கோ டணைந்தனர்காண்!
பழியில் மொழிசெய் பண்பினர்தம்
பக்கத் திருந்தே உய்குவர்காண்!
கழிபே ரின்பங் காணாரோ?
கண்டவர் பெற்றோர் பேணாரோ?
அழிவில் பெரும்புகழ் அடைவரென்றால்
ஐந்தாம் பிறையே வளருதியே!
5
தூக்கிய கொள்கைகள் பூண்டனர்காண்!
தூங்கா தரும்பணி காண்குவர்காண்!
ஊக்கிய அறநெறிக் கவர்வாழ்வை
ஊழ்த்திட இருபொழு துழைக்குவர் காண்!
தேக்கிய நறுநலம் நாடாதோ?
தேடாப் பொருள்கை கூடாதோ?
ஆக்கிய பாநடை பெறுமென்றால்
ஆறாம் பிறையே வளருதியே!
6
தமியருள் தாமாய்க் கலந்தனர்காண்!
தங்கருத் திழித்தினிப் புலந்திலர்காண்!
தமிழ்மொழி நாடதன் மக்களெல்லாம்
தம்முயிர் உடல்பொருள் என்றனர்காண்!