பக்கம்:கனிச்சாறு 7.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

196  கனிச்சாறு - ஏழாம் தொகுதி


153

நாவை.சிவம் - தாமரை முதல்மகன்
சிவ.தமிழ்க்கதிரவன் பிறப்புக்கு வாழ்த்து!


‘நாவை சிவம்’ - எனும் நற்றமிழ் மகற்குத்
‘தாமரை’ ஈன்ற ‘தமிழ்க்கதி ரவன்’, எனும்
தலைமகன் வளர்ந்து தண்டமிழ்க் கல்விப்
புலமையும் ஆங்கிலப் புதுமையும் நிரம்பிப்
பிற்றைத் தமிழகம் பெருஞ்சிறப் பெய்தக்
கற்றன வெல்லாங் கடைப்பிடித் தொழுகிச்
சான்றோர் அவனைச் ‘சான்றோன்’ எனுமா
றான்ற பெரும்புகழ் அமைந்து, வா ழியவே!

-1971
 

154

நாவை.சிவம் தாமரை மகள்
தமிழ்மலர் பிறப்புக்கு வாழ்த்து!


நாவை சிவம்,தா மரை சிவம் நன்கு பெற்ற
பூவை ‘தமிழ்மலர்’ பூத்ததே - பாவைக்குச்
செந்தமிழ் அன்னை சிறக்கத் துணைநிற்பாள்
எந்தமிழ் பேணுக என்று!

-1972
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/241&oldid=1447114" இலிருந்து மீள்விக்கப்பட்டது