இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பாவலரேறு பெருஞ்சித்திரனார் ☐ 243
211
இறையரசனுக்கு வாழ்த்துரை!
பாவிலுரை செய்புலவர்
இறையரசன் முன்னர்
பாரறநூல் திருக்குறட்குப்
பாட்டிலுரை செய்தார்!
நாவிலுரை தூயதமிழ்,
நல்லுணர்வு நெஞ்சம்,
நந்தமிழின் முன்னேற்ற
நறுங்கொள்கை, வாய்மை,
மேவலுறும் பாமணியாம்
இறையரசன் இக்கால்
மேலுமொரு நல்லறநூல்
நாலடியார் ஆய்ந்தே
பாவிலுரை பகர்ந்துள்ளார்;
பயன்மிகவும் செய்தார்!
பைந்தமிழர் படித்துணர்க!
பாராட்டும் செய்க!
மண்டிலத்தில் உரைசெய்த
மாண்பதனால் கற்பார்
மனத்தில்உரை உடன்படியும்;
கருத்துநிலை நிற்கும்!
வண்டிமிரும் மலர்குடைந்து
தேன்சுவைத்து, நாமும்
வாழ்வதற்கே அடைசுட்டிப்
பயன்தருதல் போல,
கண்டுபொருள் தாம்சுவைத்து
நாம்சுவைப்ப தற்கும்
கவினுறவே உரைதந்தார்
பாவடிவில்! அன்னார்
தொண்டுபெரும் பயன்நல்கும்;
துய்ப்பவர்க்கே இன்பம்
தோன்றுமதோ டறம்விளங்கும்
தொன்தமிழும் வாழும்!