54☐ கனிச்சாறு - எட்டாம் தொகுதி
“முட்புதர்கள் மொய்த்ததரை எங்கும் - எதிர்
முட்டுகருங் கற்களும் நெருங்கும் - மக்கள்
இட்டடி எடுத்தெடுத்து வைக்கையிலே
கால்களில் தடுங்கும் உள்- நடுங்கும்!
கிட்டிமர வேர்கள் பலகூடும் அதன்
கீழிருந்து பாம்புவிரைந் தோடும் - மர
மட்டையசை வால்புலியின்
குட்டிகள்போய்த் தாய்ப்புலியைத் தேடும் - பின்வாடும்.
நீள்கிளைகள் ஆல்விழுதி னோடு - கொடி
நெய்துவைத்த நற்சிலந்திக் கூடு - கூர்
வாளெயிற்று வேங்கையெலாம்
வால்சுழற்றிப் பாயவரும் - காடு - பள்ளம் மேடு.
கேளொடும் கிளம்பிவரும் பன்றி - நிலம்
கீண்டுகிழங் கே,எடுத்த தன்றி - மிகு
தூளிபடத் தாவுகையில்
ஊளையிடும் குள்ளநரி, குன்றில் - புகும் ஒன்றி!
வானிடை ஓர் வானடர்ந்த வாறு - பெரு
வண்கிளை மரங்கள் என்ன வீறு - நல்ல
தேனடை சொரிந்ததுவும்
தென்னைமரம் ஊற்றியதும் ஆறு - இன்பச் சாறு.
கானிடைப் பெரும்பறவை நோக்கும் - அது
காலிடையே காலிகளைத் தூக்கும் - மற்றும்
ஆனினம் சுமந்தமடி
பாவேந்தர் நுண்ணோக்குப் பாடல்கள் ஏராளம்!
ஆவலால் ஒன்றிரண் டழகைக் காட்டினேன்!
எத்துணை எளிமை! எத்துணை இனிமை!
கொத்தும் கிளியும் கொய்யாப் பழமும்போல்!
அடுத்து, அவர் கற்பனை எடுத்துக் கூறுவேன்.
மடுத்துளம் மகிழ்வீர்! மயக்கம் தவிர்ப்பீர்!
வானொரு ஆடையாம்! நிலவு பெண்ணாம்!
மானுடல் மறைத்து மதிமுகம் காட்டுமாம்!
என்னே புலவரின் கற்பனை எழுச்சி!