பாவலரேறு பெருஞ்சித்திரனார் ☐ 61
பானைவாய் திறக்கக் கண்டு
யாவுமே பறக்கும்; கன்றோ
மானைக் காணாது நிற்கும்!
அதைஒரு நரிபோய் மாய்க்கும்!
கிளையினில் பாம்பு தொங்க
விழுதென்று குரங்குதொட்டு
விளக்கினைத் தொட்ட பிள்ளை
வெடுக்கென இழுத்ததைப் போல்
கிளைதொறும் தாவித் தாவி
விழுதெல்லாம் தொங்குகின்ற
ஒளிப்பாம்பாய் எண்ணி அஞ்சி
காட்டிடை நடந்ததொரு காட்சியைப் பாவலர்
காட்டும் வகையிது! காணுங்கள் மேலும்!
‘அருவிகள் வயிரத் தொங்கல்!
அடர்கொடி பச்சைப் பட்டே!
குருவிகள் தங்கக் கட்டி!
குளிர்மலர் மணியின் குப்பை!
குறத்தியர் கவண்எ டுத்துக்
குறிபார்க்கும் விழி,நீ லப்பூ!
எறியும்கை செங்காந் தட்பூ!
தத்தும் அருவியாய்த் தாவும் கருத்துகள்!
முத்தும் பவழமும் வயிரமும் மிடைந்த
பன்மணி மாலை! பாவியக் கொத்து!
என்வகை யாயிதை இயம்புவேன்? கேளீர்!
வெள்ளப் பெருக்கை விரிப்பதைக் காண்மின்!
“இருகரை ததும்பும் வெள்ள
நெளிவினில் எறியும் தங்கச்
சரிவுகள்! நுரையோ முத்துத்
தடுக்குகள்! சுழல்மீன் கொத்தி
மரகத வீச்சு! நீரில்
மிதக்கின்ற மரங் களின்மேல்
எதுகை மோனைக்கு இறவானம் பார்க்கும்
புதிய தலைமுறைப் புழுக்கை யலன், அவன்!