பக்கம்:கனிச்சாறு 8.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64 கனிச்சாறு - எட்டாம் தொகுதி

வாழை இலையின் அடிஉண்பார் வலப்புறத்தில்
வீழ விரித்துக் கறிவகைகள் சூழவைத்துத்
தண்ணீர்வெந் நீரைத் தனித்தனியே செம்பிலிட்டு
வெண்சோ றிடுமுன் மிக இனிக்கும் - பண்ணியமும்
முக்கனியும் தேனில் நறுநெய்யில் மூழ்குவித்தே
ஒக்கநின்றே உண்டபின் சோறிட்டுத் - தக்கபடி
கேட்டும் குறிப்பறிந்தும் கெஞ்சியும் மிஞ்சுமன்பால்
ஊட்டுதல்வேண் டும்தாய்போல் ஒண்டொடியே கேட்டுப்போ
எக்கறியில் நாட்டம் இவர்க்கென்று நீயுணர்ந்தே
அக்கறியை மேன்டே லும் அள்ளிவை - விக்குவதை
நீமுன் நினைந்து நினைப்பூட்டு நீர் அருந்த!

ஈமுன்கால் சோற்றிலையில் ட்டாலும் - தீமையம்மா!”


 - என்றே குடும்ப விளக்கில் எழுதுகின்ற
பொன்னேர் வரிகளாற் பாவேந்தர் பூண்விளங்கும்!
அடுத்து, அவர் மனவியல் அறிவை உரைக்கிறேன்.
தந்தை குழந்தையைத் தாவி யணைத்துப்
பள்ளிக் கனுப்பும் பாங்கை உரைக்கிறார்!

“தலைவாரிப் பூச்சூடி உன்னை-பாட
சாலைக்குப் போ என்று சொன்னாள்உன் அன்னை!
சிலைபோல ஏனங்கு நின்றாய் - நீ
சிந்தாத கண்ணீரை ஏன்சிந்து கின்றாய்?

விலைபோட்டு வாங்கவா முடியும் - கல்வி
வேளைதோறும் கற்று வருவதால் படியும்!
மலைவாழை யல்லவோ கல்வி - நீ
வாயார உண்ணுவாய் போஎன் புதல்வி!

படியாத பெண்ணா யிருந்தால் - கேலி
பண்ணுவார் என்னைஇவ் வூரார் தெரிந்தால்!
கடிகாரம் ஓடுமுன் ஓடு! - என்
கண்ணல்ல? அண்டை வீட்டுப் பெண்களோடு!”

‘கடிதாய் இருக்குமிப் போது! - கல்வி
கற்றிடக் கற்றிடத் தெரியுமப் போது!
கடல்சூழ்ந்த இத்தமிழ் நாடு - பெண்

கல்வி,பெண் கல்வி என்கின்ற தன்போடு!’
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/78&oldid=1448043" இலிருந்து மீள்விக்கப்பட்டது