பாவலரேறு பெருஞ்சித்திரனார் ☐ 75
தமிழ்உள்ளம் நாட்டுப்பற்று தகுவுயர் சீர்திருத்தம்
இமியுமே குறையாவாறு இருந்தன அவர்பால்!
தமிழ்உள்ளம் அவர்க்கே உள்ள தனியுள்ளம்!
இதற்குமுன் யார்க்கும் இல்லா தது,அது!
‘இன்பத் தமிழ்மொழி எமது! - எமக்
கின்பம் தரும்படி வாய்த்தநல் லமுது!’ - என்றதும்,
‘கனியிடை ஏறிய சுளையும் முற்றற்
கழையிடை ஏறிய சாறும்
பனிமலர் ஏறிய தேனும் - காய்ச்சும்
பாகிடை ஏறிய சுவையும்
நனிபசு பொழியும் பாலும் - தென்னை
நல்கிய குளிரிள நீரும்
இனியன என்பேன் எனினும் தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர்!’ - என்றதும்
‘செந்தா மரைக்காடு பூத்தது போல
செழித்த என்தமிழே ஒளியே வாழி!’ - என்றதும்,
‘செந்தமிழே! உயிரே! நறுந்தேனே!
செயலினை மூச்சினை உனக்களித் தேனே!
நைந்தாய் எனில் நைந்து போகும் என் வாழ்வு!
நன்னிலை உனக்கெனில் எனக்குந் தானே?’ - என்றதும்,
‘எனையீன்ற தந்தைக்கும் தாய்க்கும் மக்கள்
தனையீன்ற தமிழ்நாடு தனக்கும் என்னால்
தினையளவு நலமேனும் கிடைக்கும் என்றால்
தமிழ்மேல் அவர்க்குள்ள காதலைக் காட்டும்!
தமிழ்க்காக வாழ்ந்தார், தமிழைப் பாடினார்;
தமிழைத் தொழுதார்; தமிழைப் புதுக்கினார்!
‘தமிழரின் மேன்மையை இகழ்ந்தவனை என்
தமிழ்க்காகப் போரிட்டார்;
‘இன்பத் தமிழ் குன்றுமேல் தமிழ்
கவன்றார்; அறிவுறுத்தினார்; கண்ணிமையாது காத்தார்!